சுத்தமல்லியில் போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் தெய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
சிறுமியை மீட்டு திருநெல்வேலி சரணாலயத்தில் ஒப்படைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.