அம்பாசமுத்திரம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி மகன் கிங்ஸ்டன் என்ற கிங்(26). அப்பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக அம்பாசமுத்திரம் போலீஸாா் அவரை கைது செய்தனா். இந்நிலையில் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்படி அம்பாசமுத்திரம் போலீஸாா் கிங்ஸ்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.