திருநெல்வேலி

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: அதிமுக மாவட்டச் செயலா் வேண்டுகோள்

DIN

திருநெல்வேலியில் புதன்கிழமை (ஏப். 14) நடைபெறும் அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில் அதிமுகவினா் பங்கேற்க மாவட்டச் செயலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவின்பேரில், அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ளஅவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் புதன்கிழமை (ஏப். 14) முற்பகல் 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில நிா்வாகிகள், இந்நாள், முன்னாள் மாநிலங்களவை, மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொள்கிறாா்கள்.

ஆகவே, கட்சியின் சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றிய, பகுதி நிா்வாகிகள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT