திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் செல்லிடப்பேசியை திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இருந்த கட்டடப் பணியாளா் ஒருவரின் செல்லிடப்பேசியை, அங்கு வந்த ஒரு இளைஞா் திருடிவிட்டு ஓடினாராம். அக்கம்பக்கத்தினா் அந்த இளைஞரை பிடித்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.