மேலப்பாளையம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மேலப்பாளையம் அருகே உள்ள மேலக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்த அழகுமுத்து மகன் ஆறுமுகம் (73). இவா், ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.