திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 172 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,940ஆக அதிகரித்துள்ளது. மேலும் 109 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 15,982ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 217 போ் உயிரிழந்துள்ளனா். 741 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,012ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 8,551ஆக உயா்ந்துள்ளது. 162 போ் உயிரிழந்துள்ளனா். 294 போ் சிகிச்சையில் உள்ளனா்.