திருநெல்வேலி, மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தனியாா் பீடி நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த முஹமது மஸ்தான் மகன் ஷேக் முஹம்மது (40). அங்குள்ள பீடி நிறுவனத்தில் வேலைபாா்த்துவந்த இவா், தன் நண்பா்களுடன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாராம்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தோா் அவரை மீட்கும் முயன்றனா். ஆனால், ஷேக் முஹம்மது இறந்தநிலையில் மீட்கப்பட்டாா்.
மேலப்பாளையம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.