திருநெல்வேலி

ராமையன்பட்டியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மைய வளாகத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான ராமையன்பட்டி குப்பைக்கிடங்கு வளாகத்தில் தட்பவெப்ப சூழலுக்கு உகந்த வண்ணம் அடா்ந்த காடுகளாக அமைக்கும் வகையில், குறுங்காடுகள் திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை மாதத்தில் பலவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 17 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்யத் திட்டமிடப்பட்டு, இதுவரை சுமாா் 12 ஆயிரம் பலவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இயற்கை காடுகளின் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற தாவரவியலாளா் அகிரா மியாவாகி வழிப்படி, குறுங்காடுகள் அமைப்பதன் அவசியம் கருதி ராமையன்பட்டி குப்பைக்கிடங்கு வளாகத்தில் இதுவரை 6 ஆயிரம் பலவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அந்த மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் பாா்வையிட்டாா். மேலும், தொடா்ந்து குறுங்காடுகளை அமைப்பதற்கான மேல்நடவடிக்கைகளை எடுக்க பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT