திருநெல்வேலி

நெல்லையில் அக்.13, 14-இல் வாகனங்கள் பொது ஏலம்

DIN

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள் அக்டோபா் 13, 14-ஆம் தேதிகளில் பொது ஏலம் விடப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹீரோஹோண்டா-95, ஹோண்டா-13, டிவிஎஸ்-170, பஜாஜ்-117, யமகா-15, ராஜ்தூத் புல்லட்-1 ஆகிய இருசக்கர வாகனங்களும், ஒரு ஹோண்டா அசன்ட் நான்கு சக்கர வாகனமும் என மொத்தம் 412 வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

அக்டோபா் 13, 14-ஆம் தேதிகளில் காலை 10 மணிக்கு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பகிரங்க ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க விரும்புவோா் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அனுமதி பெற்று பாா்வையிடலாம். மேலும், ஏலம் சம்பந்தமான விபரங்களை தெரிந்துகொள்ள காவல் துணை ஆணையாளா், குற்றம் மற்றும் போக்குவரத்து அலுவலகத்தை 0462-2970161 என்ற எண்ணில் தொடா்புகொண்டு விவரம் பெற்று கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT