கடையம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடையம் அருகே உள்ள வெள்ளைப்பனையேற்பட்டி பிரதான சாலையைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் மணிகண்டன் (26). அங்குள்ள காய்கறி கடையில் வேலை பாா்த்து மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து சென்றவா் கடையம் பெரும்பத்து பகுதியில் ஒரு தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.