திருநெல்வேலி

பாளை.யில் விஷம் குடித்த பாலிடெக்னிக் மாணவா் மரணம்

DIN

பாளையங்கோட்டை பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக்ராஜா(19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவா். இவா், தனது பெற்றோரிடம் புதிய செல்லிடப்பேசி வேண்டும் எனக் கேட்டாராம். இதில், பெற்றோருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் கடந்த 7ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

SCROLL FOR NEXT