சேரன்மகாதேவியில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத் திறனாளிகளை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும், வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு செல்வசுந்தரி தலைமை வகித்தாா். மாதா் சங்க மாவட்டச் செயலா் கற்பகம், ஒன்றியச் செயலா் மாசானம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.