அம்பாசமுத்திரம்/கடையநல்லூா்: விக்கிரமசிங்கபுரம், சிவகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத் திறனாளிகளை உணவுப் பாது காப்பு சட்டம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளவா்கள் பட்டியலில் இணைப்பது, எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலா் அகஸ்தியராஜன் தலைமை வகித்தாா். ஆா்.முத்துகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசினாா். இதில் சிஐடியூ சுரேஷ்பாபு, ஓய்வுபெற்ற அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக ஊழியா் காதா்பாட்சா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் எஸ்.ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிவகிரியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா். வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் நடராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலா் சக்திவேல், சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்க துணைச்செயலா் அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.