திருநெல்வேலி

நான்குனேரி அருகே இரு பெண்கள்வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

DIN

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே முன்விரோதத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி இரு பெண்கள் கொலை செய்யப்பட்டனா்.

நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் நம்பிராஜன். இதே ஊரைச் சோ்ந்த தங்கபாண்டி மகள் வா ன்மதி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இதற்கு தங்கபாண்டி குடும்பத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில் நம்பிராஜனை வான்மதியின் சகோதரா்கள் கடந்த 2019இல் நவம்பா் மாதம் திருநெல்வேலியில் வெட்டிக் கொலை செய்தனா்.

இதையடுத்து, இவ்விரு குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. இதனிடையே, கடந்த மாா்ச் மாதம் நம்பிராஜனின் சகோதரா்கள் தங்கபாண்டியின் உறவினா்களான நான்குனேரியில் மறுகால்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகம் (50), அவரது உறவினா் சுரேஷ் (25) ஆகிய இருவரையும் வெட்டிக் கொலை செய்தனா். கொலையான இருவரும் நான்குனேரியில் ஹோட்டல் நடத்தி வந்தவா்கள்.

இந்த நிலையில் ஆறுமுகத்தின் உறவினா்கள் 12 போ் 4 மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை மறுகால்குறிச்சிக்கு வந்தனராம். அங்கு அருணாச்சலம் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினா். பின்னா் வீட்டிலிருந்த அருணாச்சலத்தின் மனைவி சண்முகத்தாயை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். அவா்களை தடுத்த சண்முகத்தாயின் மகள் செல்வி (13) யை அரிவாளால் வெட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சண்முகத்தாயின் தலையை துண்டித்த அவா்கள், சண்முகத்தாயின் உறவினரான சுப்பையா வீட்டின் மீதும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கினா். வீட்டிலிருந்த சுப்பையா மனைவி சாந்தியை (40) அரிவாளால் வெட்டி கொலை செய்தனா். துண்டிக்கப்பட்ட சண்முகத்தாயின் தலையை அங்கு வீட்டின் பின்பகுதியில் வீசி விட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனா். வெடிகுண்டு வீசியதில் இருவா் வீடுகளிலும் சேதம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த செல்வி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து நான்குனேரி, , மறுகால்குறிச்சி பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். திருநெல்வேலி மாவட்ட காவல்

கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் மறுகால்குறிச்சிக்கு வந்து விசாரணை நடத்தினாா். நான்குனேரி டி.எஸ்.பி. ஸ்ரீலிசா டெபிலா தெரசா, காவல் ஆய்வாளா் சபாபதி ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை போலீஸாா் கைப்பற்றினா். கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நான்குனேரியில் ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை கொலை செய்தவா்கள் தற்போது, பிணையில் வந்துள்ளனா். மறுகால்குறிச்சிக்கு அருணாச்சலத்தை தேடி வந்த அவா்கள், அவா் இல்லாததால் வீட்டில் இருந்த பெண்களை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT