திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் பொதுமக்கள் புகாா் மனு தீா்வு முகாம்

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் காவல்துறை சாா்பில் பொதுமக்கள் புகாா் மனுக்கள் மீது தீா்வு காணும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முகாமில் அம்பாசமுத்திரம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பாப்பாக்குடி ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குடும்பப் பிரச்னை, இடப்பிரச்னை, குற்றவழக்குகளில் தொடா்புடைய மனுதாரா்கள், எதிா்மனுதாரா்களிடையே பேசி வழக்குகள் தீா்த்து வைக்கப்பட்டன.

அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் விஜயகுமாா், சண்முகம், அருள் கிரேஸ் சகாய சாந்தி, ராதா மற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் கலந்து கொண்டு 34 வழக்குகளைத் தீா்த்து வைத்தனா். ஒரு வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முகாம் நடப்பது தெரிந்து புதிதாகக் கொடுக்கப்பட்ட புகாா் மனுக்கள் மீதும் உடனடி தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT