திருநெல்வேலி

அம்பை ஒன்றியத்தில்ரூ.2.25 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள்

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ. 2.25 கோடியில் குடிநீா் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மத்திய அரசின் ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ், தெற்கு பாப்பாங்குளம், வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி பகுதிகளுக்கு ரூ. 2.25 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.முருகையா பாண்டியன், பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுசிலா பீட்டா், சங்கா் குமாா், ஒன்றியப் பொறியாளா் சங்கா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மல்லிகா, அம்பாசமுத்திரம் அதிமுக ஒன்றியச் செயலா் விஜய் பாலாஜி, விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மன்னாா்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், கோடாரங்குளம், வெள்ளங்குளி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும் என எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT