திருநெல்வேலி, செப். 25: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
பி. தியாகராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் டி.வீரகுமாா், செயலா் சி.கருப்பையா ஆகியோா் அறிக்கை சமா்ப்பித்தனா்.
மாநில துணைத் தலைவா் ஆா்.நேசகுமாரி மல்லிகா வாழ்த்திப் பேசினாா். மாநில துணை பொதுச்செயலா் எஸ். ராஜாமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
எல்.ஐ.சி., வங்கி, மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரைவாா்க்கக் கூடாது. மின்வாரியத்தில் ஓய்வுபெற்ற அனைவருக்கும் தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.