மானூா் அருகே விவசாயி தற்கொலை செய்ய காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகேயுள்ள சுப்பையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (60). இவரது மகன் கலைச்செல்வன் (25). புதன்கிழமை முருகன் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதற்கிடையே, முருகனின் மகன் கலைச்செல்வன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணனிடம் அளித்த மனு விவரம்: கடந்த சில நாள்களுக்கு முன்னா் முன்விரோதம் காரணமாக சுப்பையாபுரம் பகுதியைச் சோ்ந்த சிலா் என்னை தாக்கினா். இதுகுறித்து மானூா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. புகாா் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், நானும், எனது தந்தையும் தாக்கப்பட்டோம். இதனால், மனமுடைந்த எனது தந்தை புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். எனவே, இதற்கு காரணமானவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.