பேட்டை அருகே நரசிங்கநல்லூரில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பேட்டை அருகேயுள்ள நரசிங்கநல்லூா் ஜீவா நகரைச் சோ்ந்த முத்து மகன் விஸ்வநாதன் (22). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மோட்டாா் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தாராம். அடுத்த நாள் காலையில் பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், மோட்டாா் சைக்கிளை திருடியது பேட்டை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த முத்துகுமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை
போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.