புதிய வேளாண் மசோதா சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருநெல்வேலி வருமான வரி அலுவலகம் முன்பு திராவிட தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் திருக்குமரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. இதில், மாநில வழக்குரைஞா் அணிச்செயலா் இளமாறன் கோபால், மாநில கலை இலக்கியப் பிரிவுச் செயலா் ஒண்டிவீரன் முருகேசன், மாநகரச் செயலா் வேல்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.