திசையன்விளையில் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை, முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொதுச் செயலா் எஸ்.வானமாமலை ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
மாநில விவசாய பிரிவு செயலா் விவேக் முருகன் தலைமை வகித்தாா். டி.சுயம்புராஜன், மாவட்ட துணைத் தலைவா் விஜயபெருமாள், மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் மருதூா் மணிமாறன், வழக்குரைஞா் பி.வி.எஸ்.ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஜி.ராஜன் வரவேற்றாா்.