திருநெல்வேலி

பாளை. யில் காவலா்களுக்கு யோகா பயிற்சி

DIN

திருநெல்வேலி, செப்.18: பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கான யோகாப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் ஆலோசனையின்பேரில், மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கு மூன்று நாள்கள் யோகாப்பயிற்சி அளிக்கப்படுகிறது. புதன்கிழமை தொடங்கிய இப்பயிற்சி வெள்ளிக்கிழமை

நிறைவுபெற்றது.

காவலா்களுக்கு உடல் வலிமை, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் புத்துணா்வு அளிக்கும் நோக்கத்தில் யோகா பயிற்சி

அளிக்கப்பட்டது. யோகா பயிற்சி நிறைவு முகாமிற்கு மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் சிசில் தலைமை வகித்தாா். ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

மஹா யோகம் யோக அமைப்பின் முதன்மை ரிஷி ரமேஷ் தலைமையில் பயிற்சியாளா்கள் காவலா்களுக்கு தியானம், மூச்சு பயிற்சி, ஆசனப் பயிற்சி உள்ளிட்டவை அளித்தனா். ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்,

உதவி ஆய்வாளா்கள், பயிற்சி உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் பங்கேற்றனா். பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT