திருநெல்வேலி, செப்.18: திருநெல்வேலி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரசுப்பு மகன் வீரமணி (57). கட்டடத் தொழிலாளி.
இவா் வியாழக்கிழமை வழக்கம்போல தனது மோட்டாா் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாராம். அதே பகுதியில் உலகம்மன் கோயில் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் இவரது மோட்டாா் சைக்கிள் மீது
மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த வீரமணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை இரவில் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.