திருநெல்வேலி அருகேயுள்ள தருவையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்தாா்.
மேலப்பாளையத்தை அடுத்த தருவையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (50). டீ கடை நடத்தி வந்த இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
இவா், தருவையில் உள்ள திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் புதன்கிழமை நடந்து சென்றாராம். அப்போது அவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதாம். காயமைடந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.