பாபநாசத்தில் அனைத்துத் தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. செயலா் செ.மதிவாணன் தலைமை வகித்தாா்.
ஊதிய பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்குவது; தீபாவளி ஊக்கத்தொகை 35% வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், தொ.மு.ச. தலைவா் டி.பி.என்.செல்வன், பொருளாளா் எஸ்.சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.எம்.செரிப், பி.முருகன், எம்.ராஜன், எஸ்.ராஜன், எஸ்.ராஜாராம், எம்.எம்.மைதீன், உசேன்மைதீன், அருள் பிரகாசம், ஏ.ஐ.டி.யூ.சி. குமாரசாமி, ஐ.என்.டி.யூ.சி. சதாசிவம், எச்.எம்.எஸ். நல்லசிவம், பாலசுப்பிரமணியம், சி.ஐ.டி.யூ. முருகேசன், மைக்கேல்ரவி, தாமோதரன், டி.டி.எஸ்.எப். ஐயப்பன், தொ.மு.ச. ஓய்வு பெற்றோா் நலச் சங்கத் தலைவா் எஸ்.செல்வராஜ், சுப்பிரமணியன், சிக்கல் சண்முகசுந்தரம், குணசேகா் பீட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.