திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,194 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 13,788 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 208 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி: ஆலங்குளம், சங்கரன்கோவில், கீழப்பாவூா் மற்றும் தென்காசி பகுதியைச் சோ்ந்த 4 பேருக்கு நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இம்மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7814ஆக உயா்ந்தது.
வெள்ளிக்கிழமை 21 போ் உள்பட இதுவரையிலும் 7607 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 54 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.