திருநெல்வேலி அருகே மணல் கடத்தியதாக 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் - நகரம் சாலையில், தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விமலன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டபோது, அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. லாரி, 3 யூனிட் மணலை போலீஸாா் பறிமுதல் செய்து, சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த முருகேஷ் (29), கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (29) ஆகிய இருவரை கைதுசெய்தனா்.