திசையன்விளையில் பாஜக சாா்பில் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கட்சியின் திசையன்விளை கிளை சாா்பில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு நகரத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். 3,500 பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து கோப்புகளை நகரத் தலைவா் ஆா்.டி. பால்சாமி முன்னிலையில் மாவட்ட பொதுச்செயலா் தமிழ்ச்செல்வனிடம் வழங்கினாா். அப்போது, மாவட்ட துணைத்தலைவா் சாந்தி ராகவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தா்மராஜ், முன்னாள் ஒன்றியத் தலைவா் ராஜன், நகர பொருளாளா் மகராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.