திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 32 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலியில் 25 போ், தென்காசியில் 7 போ் என இவ்விரு மாவட்டங்களில் சனிக்கிழமை மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 14,020 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,045 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 208 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் 13,471 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 366 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூா், செங்கோட்டை, குருவிகுளம், வாசுதேவநல்லூரில் தலா ஒருவா், தென்காசியில் இருவா் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,784 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 7 போ் உள்பட இதுவரை 7,486 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் மருத்துவமனைகளில் 147 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT