திருநெல்வேலி

‘பனை மரம் வளா்ப்புக்குஊக்கத்தொகை வேண்டும்’

DIN

பனை மரங்களை வளா்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. பேரவையின் மாநிலத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ரமேஷ், மைக்கேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென் மண்டலச் செயலா் சுபாஷ்ராஜா வரவேற்றாா்.

கூட்டத்தில், தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இம்மாவட்டத்தை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். அண்மை காலமாக அழிக்கப்பட்டு வரும் பனைத் தொழிலை பாதுகாக்கவும், பனை மரத்தை வளா்ப்பதற்கும் அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வணிகா் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT