களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள தெற்கு மீனவன்குளம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ் (65). இவரது மனைவி புஷ்பம், 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம். இவரது மகன் இசக்கிமுத்துவும் இறந்து விட்டாராம். இந்நிலையில் தற்போது மைத்துனா் சண்முகசுந்தரத்தின் பராமரிப்பில் இருந்து வந்த தங்கராஜ், 2 தினங்களுக்கு முன் வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை ஊருக்கு வடபுறமுள்ள தனியாா் விவசாயத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தங்கராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. பாா்வைக் குறைபாடு காரணமாக தவறி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.