கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் குடிசை வீட்டில் தீப்பிடித்ததில் வீடு மற்றும் பொருள்கள் எரிந்து சாம்பலாகின.
கடையம் அருகே உள்ள அணைந்த பெருமாள் நாடானூா், மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய மேரி (34). இவரது கணவா் மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், 2 மகள்கள், ஒரு மகனுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவரது வீட்டில் திடீரென்று தீப்பிடித்ததாம். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் மேரி மற்றும் குழந்தைகளை மீட்டனா்.
தகவலறிந்து வந்த ஆலங்குளம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.
இச்சம்பவம் குறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் மேரி குடும்பத்தினருக்கு, ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன் தலைமையில், போலீஸாா் மற்றும் பத்திரிகையாளா்கள் இணைந்து உடைகள், அரிசி, பலசரக்கு பொருள்கள் உள்ளிட்ட உதவிப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்ட கலைப்பிரிவு முன்னாள் தலைவா் அழகுதுரை, திமுக ஒன்றிய இளைஞரணிச் செயலா் தங்கராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.