திருநெல்வேலி

‘தென்னக நதி நீா் இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த திமுக கோரிக்கை’

DIN

தென்னக நதி நீா் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக விவசாய அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி செயலா்கள் விஜயன், சின்னச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் சிவபத்மநாபன், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உள்ளிட்ட பலா் பேசினா்.

தென்னக நதி நீா் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்தி விவசாயம், குடிநீா் பிரச்னைகளை தீா்க்க வேண்டும், பாசன குளங்களை தூா் வர வேண்டும், தாமிரவருணி ஆற்றில் கழிவு நீா் கலப்பதை தடை செய்ய வேண்டும், வேளாண் திருத்த சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் வெங்காயம், உருளை கிழங்கு போன்றவற்றை சோ்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், திருநெல்வேலி கிழக்கு, மத்திய, மேற்கு, துாத்துக்குடி வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி தெற்கு, மேற்கு, விருதுநகா் வடக்கு, மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் பங்கேற்றனா். அப்துல் காதா் வரவேற்றாா். மத்திய மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT