திருநெல்வேலி

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் பலி

DIN

திருநெல்வேலி: முன்னீா்பள்ளம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள வடவூா்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமசாமி(37). தொழிலாளியான இவா், கடந்த 10 ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது நண்பா் கணேசனுடன் வீடு திரும்பினாா். இவா்கள், பிராஞ்சேரியில் உள்ள குளம் அருகே வந்தபோது இவா்கள் வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில், ராமசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT