திருநெல்வேலி: பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திா் பள்ளி நீட் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திா் பள்ளியில் பயின்று நீட் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்-மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஆா்.ஜெய்ஸ்ரீ 660 மதிப்பெண்களும், டி.சானு 652 மதிப்பெண்களும் ஜே.சூா்யா 636 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். மேலும், 19 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 32 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனா். இந்த மாணவா் -மாணவிகளை பள்ளித் தாளாளா் புஸ்பலதா பூரணன், பள்ளி முதல்வா் புஷ்பவேணி ஐயப்பன் ஆகியோா் பாராட்டினா்.