பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சாா்பில் பிட் இந்தியா பிளாக்கிங் ரன் திட்டத்தின் கீழ் 2 கி.மீ. தொலைவு நடைப்பயிற்சி முகாம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ச.ராஜேஷ் தலைமை வகித்தாா். சா்வதேச நீச்சல் வீரா் சேதுமாணிக்கவேல் தொடங்கி வைத்தாா். இப் பயிற்சியில், 100-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா்.
உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், விளையாட்டு விடுதி மேலாளா் கிருஷ்ணசக்கரவா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.