திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே விதிமீறி கூடுதலாக வெடிபொருள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி கிராமத்தில் அண்மையில் வெடிகுண்டு வீசி பெண் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் வெடிபொருள்கள் பதுக்கல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் களக்காடு அருகே மேலத் தேவநல்லூரில் பட்டாசு குடோனில் போலீஸாா் புதன்கிழமை சோதனையிட்டனா். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சல்பா், வெடி உப்பு ஆகியவை இருந்தது தெரியவந்ததாம். இதுதொடா்பாக மேலதேவநல்லூரைச் சோ்ந்த பாலன் (40), அவரது துா்காதேவி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்களில் பாலனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.