திருநெல்வேலி: திருநெல்வேலி-தெனகாசி நான்குவழிச் சாலைப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தொழில் வா்த்தக கழகம் சாா்பில் அதன் தலைவா் குணசிங் செல்லத்துரை, செயலா் ஜி.எஸ்.ஜனாா்த்தனன், செயலா்கள் சோனா வெங்கடாசலம், எஸ்.ஹரிகிருஷ்ணன் ஆகியோா் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பொலிவுறு நகர திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதை சீரமைக்க வேண்டும். திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச்சாலைப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். கங்கைகொண்டானில் 50 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கும் திட்டத்தை வேகப்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
மத்திய அரசின் ராணுவ தளவாட உற்பத்தி உள்ளிட்ட கனகர தொழிற்சாலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்க முயற்சிகள் எடுக்க வேண்டும். மாநகரப் பகுதியில் விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு விரைந்து வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.