திருநெல்வேலி

திருநெல்வேலி-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளைத் துரிதப்படுத்தக் கோரி மனு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி-தெனகாசி நான்குவழிச் சாலைப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தொழில் வா்த்தக கழகம் சாா்பில் அதன் தலைவா் குணசிங் செல்லத்துரை, செயலா் ஜி.எஸ்.ஜனாா்த்தனன், செயலா்கள் சோனா வெங்கடாசலம், எஸ்.ஹரிகிருஷ்ணன் ஆகியோா் அளித்த மனு:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பொலிவுறு நகர திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதை சீரமைக்க வேண்டும். திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச்சாலைப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். கங்கைகொண்டானில் 50 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கும் திட்டத்தை வேகப்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

மத்திய அரசின் ராணுவ தளவாட உற்பத்தி உள்ளிட்ட கனகர தொழிற்சாலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்க முயற்சிகள் எடுக்க வேண்டும். மாநகரப் பகுதியில் விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு விரைந்து வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT