வள்ளியூா் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் ஆளில்லாத வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.
தெற்கு கள்ளிகுளம் காமராஜா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜாண் மைக்கிள். இவா், மனைவி எப்சலின் அனிதாவுடன் குடும்பமாக மும்பையில் வசித்து வருகிறாா். எனவே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள வீட்டை பூட்டி வைத்துள்ளாா்.
இந்த வீட்டை எப்சலின் அனிதாவின் தாயாா் சேவியா் சரோஜா சென்று பராமரித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் பணகுடிக்கு சென்ற சேவியா் சரோஜா, புதன்கிழமை ஊருக்கு வந்து தனது மகள் வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்றாராம். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.
உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த தங்க வளையல், கம்மல், சங்கிலி உள்ளிட்ட 44 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். திருநெல்வேலியிலிருந்து மோப்ப நாய் டைகா் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணா்கள் கைரேகைகளை பதிவு எடுத்துச் சென்றனா். போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.