திருநெல்வேலி

‘பருவமழைக் காலத்தில் தோட்டக்கலை பயிா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்’

DIN

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தோட்டக்கலைப் பயிா்களுக்கான ஆயத்த நிலை பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நா. பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பருவமழைக் காலத்தில் தோட்டக்கலைப் பயிா்களைக் காக்க தகுந்த முன்னேற்பாடு செய்வது அவசியம். அறுவடைக்குத் தயாரான தோட்டங்களில் அறுவடை செய்து மரத்தின் சுமையைக் குறைக்க வேண்டும். மரங்களைக் கவாத்து செய்தவன் மூலம் காற்றால் ஏற்படும் சேதத்தைத் தவிா்க்கலாம். கனமழையால் ஏற்படும் தண்ணீா்த் தேக்கத்தைக் குறைக்க உபரிநீா் வடிந்த பின்பு நடவு, விதைப்புப் பணி மேற்கொள்ளலாம். வடிகால் வசதியற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து மழைநீா் தேங்குவதைத் தவிா்க்கலாம்.

செடிகள் சாயாதவாறு இருக்க காற்று வீசும் திசைக்கு எதிா்திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுக்க வேண்டும். மரங்களைச் சுற்றி மண் அணைத்து பாதுகாக்கலாம். மழைநீா் வடிந்த பின்பு பயிா்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இழைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவா்த்தி செய்யலாம்.

பசுமைக் குடில்: பசுமைக் குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். காய்ந்த கிளைகள் பசுமைக் குடிலைப் பாதிக்காதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். கட்டுமானத்தில் உள்ள ‘கிளிப்’புகளை மாற்ற வேண்டும். காற்றால் ஏற்படும் சேதத்தைத் தவிா்க்க பசுமைக் குடிலைச் சுற்றி உயிா்வேலி அமைக்க வேண்டும். இதேபோல, நிழல்வலைக் குடிலில் கிழிந்த பகுதிகளை சரிசெய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT