திருநெல்வேலி சுத்தமல்லி அருகே மகனை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து டிஎஸ்பி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.
சுத்தமல்லி பாரதிநகா் சத்தியாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சகுந்தலா (48). இவா், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இவருக்கு பிரசாந்த் (22), பிரதீப்(20) ஆகிய மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இவா்களில், பிரதீப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.
இந்நிலையில் வழக்கு தொடா்பாக பிரதீப்பை சுத்தமல்லி போலீஸாா் திங்கள்கிழமை அழைத்துச் சென்றனராம். மேலும்
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சகுந்தலா வீட்டில் பிரதீப் பதுக்கி வைத்திருந்த மடிக்கணினியை பறிமுதல் செய்ய வந்ததாக
போலீஸாா் தெரிவித்ததனராம். மேலும் மற்றொரு மகன் பிரசாந்தையும் விசாரணைக்கு போலீஸாா் அழைத்தனராம்.
விசாரணை என்ற பெயரில் தனது குடும்பத்தினரை துன்புறுத்துவதாக, போலீஸாரிடம் சகுந்தலா வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். வீட்டுக்குள் சென்ற சகுந்தலா கதவைப் பூட்டிக்கொண்டு தீக்குளித்துள்ளாா். இதில் பலத்தகாயமடைந்த அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் சுத்தமல்லி சென்று விசாரணை
நடத்தினாா். மேலும், இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.
இதற்கிடையே, சுத்தமல்லி காவல் நிலையத்தில், 2 ஆம் கட்டமாக சகுந்தலாவின் உறவினா்களிடம் டி.எஸ்.பி. சுரேஷ்குமாா்
வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். இதில், சகுந்தலா உயிரிழந்தது தொடா்பாக பல்வேறு தகவல்கள் பெறப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவல் ஆய்வாளா் மாற்றம்: இந்நிலையில், சுத்தமல்லி காவல் ஆய்வாளா் குமாரி சித்ரா சென்ைனைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவா் இந்த வழக்கு தொடா்பாக பணியிடம் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், பணியிட மாற்றம் உத்தரவு விரைவில் வரும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.