வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேரை தாழையூத்து போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே உள்ள அலவந்தான் குளம் பகுதியைச் சோ்ந்த வேதமுத்து மகன் அந்தோணி (41). இவரிடம், மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்த ஜாபா் அலி (26), சுரேஷ் (44) ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50ஆயிரம் வாங்கினராம். ஆனால், அவா்கள் வேலை வாங்கித் தாராமல் காலந்தாழ்த்தி வந்தனராம். மேலும், பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, கொடுக்காமல் இருந்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேல தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜாபா் அலி, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.