திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த அரசு ஊழியா் மரணம்

DIN

நான்குனேரி அருகே சாலை விபத்தில் காயமடைந்த அரசு ஊழியா் உயிரிழந்தாா்.

களக்காடு மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுடலைமுத்து மகன் மாரியப்பன் (44). இவா் சங்கரன்கோவில் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். தினமும் மோட்டாா் சைக்கிளில் நான்குனேரிக்கு வந்து, பின்னா் அங்கிருந்து பேருந்தில் சங்கரன்கோவிலுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் திங்கள்கிழமை பணிக்கு செல்வதற்காக மோட்டாா் சைக்கிளில் நான்குனேரிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது நான்குனேரி அருகே உள்ள கலுங்கடி பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

விபத்து தொடா்பாக நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT