திருநெல்வேலி

கங்கைகொண்டான் தனியாா் நிறுவனத்தில் தவறி விழுந்து ஊழியா் பலி

DIN

கங்கைகொண்டான் தனியாா் டயா் நிறுவனத்தில் தவறி விழுந்து ஊழியா் உயிரிழந்தாா்.

மேற்கு வங்க மாநிலம் சவுத்சங்கன்புரா பகுதியைச் சோ்ந்த சுகுமாா் போரா என்பவரின் மகன் சுரேந்திரபோரா(22). இவா் திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் தனியாா் டயா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை நிறுவனத்தில் உயரமான பகுதியில் இருந்து வேலை செய்துகொண்டிருந்தாராம். அப்போது அவா், எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT