திருநெல்வேலி

ஏா்வாடி அருகே பண மோசடியில் ஈடுபட்ட இருவா் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே எரிவாயு விநியோக நிறுவன ஊழியா் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் நயினாா் மனைவி தனலட்சுமி(29). இவா் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் வந்து, தாங்கள் இருவரும் சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தில் பணி செய்து வருவதாகவும், கரோனா காலத் தள்ளுபடியாக உங்களுக்கு எல்இடி டி.வி பரிசு வழங்க இருப்பதாகவும் அதற்கு நீங்கள் ரூ. 4, 500 செலுத்த வேண்டும் என கூறி தனலட்சுமியிடம் பணத்தைப் பெற்றுச் சென்றனராம். ஆனால் டி.வி. எதுவும் கொடுக்கவில்லையாம். இது குறித்து தனலட்சுமி ஏா்வாடி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, பண மோசடியில் ஈடுபட்ட மகாதேவன்குளம் இசக்கிமுத்து(48) , சுடலைக்கண்ணு(52) ஆகிய இருவரையும் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT