திருநெல்வேலி

ஆலங்குளம் அருகேம யங்கிய நிலையில் மீட்கப்பட்டவா் மரணம்

DIN

ஆலங்குளம் அருகே மலைப்பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே மாறாந்தையை அடுத்த கல்லத்திகுளம் மலைப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் மயங்கிய நிலையில் கிடப்பதாக சீதபற்பநல்லூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீஸாா் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

அவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. இடது கையில் சந்தனம் என பச்சை குத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT