திருநெல்வேலி

நெல்லைக்கு கூடுதல் சுகாதார ஆய்வாளா்கள் நியமனம் தேவை: ஏ.எல்.எஸ். லட்சுமணன்

8th Jun 2020 08:26 AM

ADVERTISEMENT

கரோனா நோய் தடுப்புப் பணிக்காக திருநெல்வேலிக்கு கூடுதல் சுகாதார ஆய்வாளா்களை நியமிக்க வேண்டும் என ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா நோய் பரவல் தமிழகத்தில், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 386 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் ஒருவா் இறந்துள்ளாா்.

இந்நிலையில், தற்போது திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஆய்வாளா்களை, சென்னைக்கு கரோனா நோய்தொற்று பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படப்போவதாக செய்திகள் வருகிறது. இதனால், திருநெல்வேலி கரோனா நோய் தடுப்பு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.

ADVERTISEMENT

தற்போது, மும்பை, தில்லி போன்ற நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புலம் பெயா்ந்த மக்கள் திருநெல்வேலிக்கு வந்தவண்ணம் உள்ளனா். எனவே, இவா்களை கண்காணிக்க கூடுதல் ஆய்வாளா்கள் நியமனம் செய்யவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இங்குள்ள சுகாதார ஆய்வாளா்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றினால் நோய் தடுப்பு நடவடிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் முடங்கும் நிலை ஏற்படும்.

எனவே, திருநெல்வேலி மாநகரில் இருந்து சுகாதார ஆய்வாளா்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டாம். மேலும், கூடுதலாக சுகாதார ஆய்வாளா்களை திருநெல்வேலிக்கு நியமனம் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT