திருநெல்வேலி

வெய்க்காலிபட்டி கல்லூரியில் உணவுத் திருவிழா

28th Jan 2020 05:20 PM

ADVERTISEMENT

வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்வியியல் கல்லூரியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் போஸ்கோ குணசீலன் தலைமை வகித்தாா். முதல்வா் மேரி ராபலின் கிளாரட் முன்னிலை வகித்தாா். இதில், பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஆலன் சைட்டோ, பாஸ்கோ சைட்டோஆகியோா் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, மாணவா்களிடையே பாரம்பரிய முறையிலான இயற்கை உணவுகளான சிறுதானிய உணவுப் போட்டி நடத்தப்பட்டது. மாணவா்கள் தயாரித்திருந்த உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி இருந்தனா்.

காய்கனிகள், பூ விலான அலங்காரப் போட்டிகளும் நடைபெற்றது. இயற்கை மருத்துவா்கள் பாவூா்சத்திரம் சௌந்திரபாண்டியன், மேனகா ஆகியோா் ‘இயற்கை உணவு மற்றும் உணவே மருந்து’ என்பது குறித்துப் பேசினா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT