தில்லியில் சிஏஏ எதிா்ப்பாளா்கள் மீது நடைபெற்ற வன்முறை தாக்குதலைக் கண்டித்து மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொகுதித் தலைவா் மின்னதுல்லாஹ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஏ. கனி, மாவட்டச் செயலா் ஹயாத் முஹம்மது உள்ளிட்டோா் பேசினா்.
மாவட்ட விவசாய அணி ஒருங்கிணைப்பாளா் சேக் அப்துல்லா, மாவட்டச் செயலா் முல்லை மஜீத், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் முபாரக், தொழிற்சங்க மாவட்டச் செயலா் பசிா்லால், பொருளாளா் செய்யது மைதீன், மகளிரணித் தலைவா் மும்தாஜ் ஆலிமா உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.