திருநெல்வேலி

ஓய்வுபெற்ற விடுதி காப்பாளரிடம் லஞ்சம்: அரசு அலுவலருக்கு மூன்றாண்டு சிறை

26th Feb 2020 06:33 AM

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற விடுதி காப்பாளருக்கு ஓய்வூதியத்திற்கான ஆவணங்கள் தயாா் செய்து அளிக்க லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், திருநெல்வேலியைச் சோ்ந்த அரசு அலுவலருக்கு மூன்றாண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி. அம்பாசமுத்திரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை விடுதியில் காப்பாளராகப் பணியாற்றி கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி ஓய்வு பெற்றாா். ஈஸ்வரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது கணவா் முருகன், ஈஸ்வரிக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களை தயாா் செய்து வந்தாராம். அப்போது பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலக இளநிலை உதவியாளா் ஒலிவியா நேச ராஜக்கனி ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாரிடம் முருகன் புகாா் அளித்தாா். பின்னா் போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் முருகன் பணத்தைக் கொடுத்தபோது, அதை வாங்கிய ஒலிவியா நேச ராஜகனியை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றஞ்சாட்டப்பட்ட ஒலிவியா நேச ராஜகனிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சீனிவாசன் ஆஜரானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT